Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Monday 17 February 2014

VIKRAMADITYAN KADHAIGAL




விக்ரமாதித்யாவின் செவி வழிக்கதை இந்தியாவில் சமஸ்கிருதத்திலும் பிராந்திய மொழிகளிலும் பிரபலமானது. அவரைப்பற்றிய கதைகள் அதிகமாக இருந்தாலும், அவரது பெயர் வரலாற்று விவரங்கள் தெரியாத எந்தவொரு நிகழ்ச்சி அல்லது நினைவுச்சின்னத்துடன் சுலபமாக தொடர்புபடுத்தப்படுகிறது. சமஸ்கிருதத்தில் மிகவும் பிரசித்திபெற்ற இரண்டு, வேதாள பஞ்ச்விம்ஷதி அல்லது பைதல்பச்சிஸி ("25 (கதைகள்) வேதாளம்பற்றியது") மற்றும் ஸிம்ஹாஸன-த்வாத்ரிம்ஷிகா ("32 (கதைகள்) சிம்மாசனத்தைப்பற்றியது", ஸின்ஹாஸன் பட்டீஸீ எனவும் கூறப்படுவது). இவை சமஸ்கிருதத்தில் மட்டுமல்லாமல் பிராந்திய மொழிகளிலும் பல்வேறு வடிவங்களில் உள்ளன.
வேதாளம் சொன்ன இருபத்தி ஐந்து கதைகள்: இதில் வேதாளமானது அரசரிடம் ஒவ்வொரு புதிர் கதயைக் கூறி முடிக்கும் போதும் ஒரு கேள்வியைக் கேட்கும் என்றும், ஒவ்வொரு சரியான பதிலுக்குப் பிறகும் தன்னிடமிருந்து சென்ற வேதாளத்தை அரசர் பிடிக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையில், அரசர் ஒரு சாதுவால், வேதாளத்தைக் கொண்டுவந்து அவரிடம் சேர்க்க கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் கொண்டுவரும்போது பேசினால் வேதாளம் மீண்டும் அதன் இடத்திற்கே பறந்து போய்விடும் என்பதால்,கொண்டுவரும்போது ஒரு வார்த்தைகூட பேசக்கூடாது. அரசருக்கு விடை தெரியாமலிருந்தால் மட்டுமே அவர் மௌனமாக இருக்கலாம், இல்லையெனில் அவரது தலை வெடித்துச் சிதறிவிடும். துரதிர்ஷ்டவசமாக, ஒவ்வொரு வினாவிற்கும் அரசர் விடை கண்டுபிடித்துவிடுவதால், கடைசி வினா விக்ரமாதித்யாவை திகைக்கவைக்கும் வரை இருபத்து நான்கு முறை வேதாளத்தைப் பிடிப்பதும் அதனை தப்பியோட விடுவதும் தொடர்கிறது. கதா-ஸரித்ஸாகராவில் இக்கதைகளின் ஒரு வடிவம் பதிந்திருப்பதைக் காணலாம்.
சிம்மாசனத்தைப் பற்றிய கதைகள்: விக்ரமாதித்யா சிம்மாசனத்தை இழந்து, அது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அரசர் போஜ, பரமரா தர்நாட்டு அரசரால் மீட்கப்பட்ட சிம்மாசனத்தோடு தொடர்புபடுத்தப்படுகின்றன. பிறகு வந்த அரசரும் புகழ்வாய்ந்தவர். மேலும் இக்கதைகளின் தொகுப்பு, அவர் அந்த சிம்மாசனத்தில் அமர மேற்கொண்ட முயற்சிகள் பற்றியதாகும். கூறப்போகும் கதையில் சித்தரிக்கப்படுகின்ற விக்ரமாதித்யாவைப் போன்று தயாளகுணம் உடையவராய் இருந்தால் மட்டுமே அச்சிம்மாசனத்தில் ஏறி அமரமுடியும் என்று கூறும் பேசும் தன்மை வாய்ந்த 32 பெண் பதுமைகளால் (பொம்மைகளால்) இச்சிம்மாசனம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது போஜ அரசரின் 32 முயற்சிகளுக்கும் ஒவ்வொரு கதை என விக்ரமாதித்யாவின் 32 கதைகளுக்கும் வழிவகுக்கிறது. மேலும் ஒவ்வொறு முறையும் போஜ அரசர் தன் தாழ்வுத்தன்மையை ஒப்புக்கொள்கிறார். இறுதியாக, அப்பதுமைகள் அவரது அடக்கத்தைக் கண்டு மகிழ்ந்து அவரை சிம்மாசனத்தில் ஏறி அமர விட்டுவிட்டன.

No comments:

Post a Comment