Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Tuesday 28 January 2014

பால காண்டம்-2

வசிஷ்டரின் சொற்களால் சமாதானம் அடைந்த தசரதர் தனது மனத்தைத் தேற்றிக் கொண்டு, ராமனை மட்டும் அனுப்பாமல் அவனுக்குத் துணையாக லட்சுமணனையும் முனிவருடன் அனுப்பி வைத்தார். தந்தையின் சொற்படி, ராமனும் லட்சுமணனும் விசுவாமித் திருடன் புறப்பட்டுச் சென்றனர்.

முன் தோன்றி அவனுக்கு ஆயிரம் யானைகள் பலம்  கொண்ட ஒரு பெண் குழந்தை பிறக்குமென வரம் அருளி மறைந்தார். அவரது வரத்தின் படியே சுகேதுவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தாடகை என்ற பெயரில் அவள் வளர்ந்து பெரிய வளானாள். தக்க வயது வந்த போது அவள் மிகவும் அழகுள்ளவளாகவே இருந்தாள்.

சுகேதுவும் அவனை சுந்தன் என்ற யட்சனுக்கு விவாகம் செய்து வைத்தான். அத்தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனே மாரீசன். அவன் இந்திரனுக்குச் சமமானவன். மகா கர்வம் கொண்டவன். அப்போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதே பகுதியில் வசித்த அகத்திய மாமுனிவர் தன் தவத்தைக் கலைத்தானென்பதற்காக சுந்தனை இறந்துபோகும் படி செய்து விட்டார். அதனால் ஆத்திரம் கொண்ட தாடகையும் மாரீசனும் அவரையே விழுங்கிவிடுவது போல வாயை ஆவெனப் பிளந்து கொண்டு வந்தனர். அப்போது தான் தாடகை அரக்கியானாள். மாரீசனும் அரக்கனானான். தாடகையின் அழகு அடியோடு மறைந்து போய் விகார உருவம் வந்துவிட்டது.

அன்று முதல் இந்தப் பகுதியையே அவள் நாசப்படுத்தி வருகிறாள். அவளைப் பெண்ணென்றும் பாராமல் நீ கொன்றுவிட வேண்டும். அதனால் உனக்கு எவ்விதப் பாவமும் வராது."

இராமனும் கைகூப்பிக் கொண்டு "முனிசிரேஷ்டரே என் தந்தை நீங்கள் சொல்கிறபடியெல்லாம் நான் செய்ய வேண்டுமென்று கூறி அனுப்பி இருக்கிறார். உங்கள் உத்திரவின் படியே தாடகையைக் கொல்கிறேன்" என்று வில்லின் நாணை இழுத்து 'டங்'கென சத்தம் செய்தான்.

அந்த சத்தம் அக்காட்டிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் நடுநடுங்க வைத்தது. ஆனால் தாடகையோ ஆத்திரம் கொண்டு வந்தாள். தன்னை நோக்கி ஓடி வரும் தாடகையை இராமன் இலட்சுமணனுக்குக் கட்டி "பார் இவளது கோர சொரூபத்தைக் கண்டாலே கதி கலங்கும். ஆனாலும் இவள் பெண். இவளைக் கொல்ல விசுவாமித்திரர் இராமனையும் இலட்சுமணனையும் அழைத்துக் கொண்டு சரயு நதியின் தென் புறக்கரையை அடைந்தார்.

அப்போது அவர் "நீங்களிருவரும் இந்த நதியில் ஆசமனம் செய்து விட்டு வாருங்கள். உங்களுக்கு பலா, அதிபலா என்னும் இரு மந்திரங்களை உபதேசிக்கிறேன். இவற்றால் உங்களைக் களைப்போ, நோயோ, பசியோ அணுகாது" என்றார்.  அதன்படியே அவ்விருவரும் நதியில் ஆசமனம் செய்து அம்மந்திர உபதேசத்தை விசுவாமித்திரரிட மிருந்து பெற்றனர். அன்றைய இரவுசரயு   நதிக்கரையிலேயே  கழிந்தது. அதன் பின்னர் அவர்கள் சரயு நதியும் கங்கை நதியும் சேருமிடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர். அங்கு ஒரு ஆசிரமம் இருந்தது. விசுவாமித்திரர் அது பற்றி இராம இலட்சுமணரிடம் கூறினார். சிவ பெருமான் தவக் கோலத்தில் இருக்கையில் அவரது சித்தத்தைக் கலக்க காமதேவன் அங்குதான் வந்தான். முக்கண்ணன் தனது மூன்றாவது கண்ணைத் திறக்கவே காமன் எரிந்து அதே இடத்தில் சாம்பலானான். அந்த இடத்தில் அந்த நாள் முதல் சிவனின் அடியார்கள் ஆசிரமம் அமைத்து இருக்கலானர். 

காமதேவன் தனது அங்கத்தை அதாவது உடலை நாசப்படுத்திக் கொண்டதனால் அந்தப் பகுதிக்கு.  அங்கதேசமென விசுவாமித்திரர் இராமனையும் இலட்சுமணனையும் அழைத்துக் கொண்டு சரயு நதியின் தென் புறக்கரையை அடைந்தார். அப்போது அவர் "நீங்களிருவரும் இந்த நதியில் ஆசமனம் செய்து விட்டு வாருங்கள். உங்களுகபலா, அதிபலா என்னும்   இரு மந்திரங்களை உபதேசிக்கிறேன். இவற்றால் உங்களைக் களைப்போ, நோயோ, பசியோ அணுகாது" என்றார். அதன்படியே அவ்விருவரும் நதியில் ஆசமனம் செய்து அம்மந்திர உபதேசத்தை விசுவாமித்திரரிட மிருந்து பெற்றனர். அன்றையஇரவுசரயு  நதிக்கரையிலேயே     கழிந்தது. அதன் பின்னர் அவர்கள் சரயு நதியும் கங்கை நதியும் சேருமிடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்.

 அங்கு ஒரு ஆசிரமம் இருந்தது. விசுவாமித்திரர் அது பற்றி இராம இலட்சுமணரிடம் கூறினார். சிவ பெருமான் தவக் கோலத்தில் இருக்கையில் அவரது சித்தத்தைக் கலக்க காமதேவன் அங்குதான் வந்தான். முக்கண்ணன் தனது மூன்றாவது கண்ணைத் திறக்கவே காமன் எரிந்து அதே இடத்தில் சாம்பலானான். அந்த இடத்தில் அந்த நாள் முதல் சிவனின் அடியார்கள் ஆசிரமம் அமைத்து இருக்கலானர். காமதேவன் தனது அங்கத்தை அதாவது உடலை நாசப்படுத்திக் கொண்டதனால் அந்தப் பகுதிக்கு அங்கதேசமென பெயர்  ஏற்பட்டது.

அதைக் கேட்டு இராமனும் இலட்சுமணனும் பரவசமடைந்தனர். அன்றைய இரவுப்  பொழுதை அந்த ஆசிரமத்திலேயே கழித்துவிட்டு மறுநாள் ஒரு படகில் அமர்ந்து கங்கையைக் கடந்து  சென்றனர். பின்னர்  கரையிலிறங்கி அதிபயங்கரமான ஒரு காட்டுப்பகுதிக்குள் அவர்கள் பிரவேசித்தனர். அங்கு ஜன நடமாட்டமே இல்லை. யானை, புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் கர்ஜனைகளும் கொடிய விலங்கினங்களின் உறுமல்களும் கேட்டு எப்பேர்ப்பட்ட துணிச்சலான பேர்வழியும் அங்கு கதிகலங்கிவிடுவான். அந்த அடர்ந்த காட்டுப் பகுதியைக் கண்டு இராமன் ஆச்சரியப் பட்டு விசுவாமித்திரரிடம் "மாமுனியே, இந்த காட்டின் பெயர் என்னவோ?" என்று கேட்டான். அவரும் அந்தக் காட்டைப் பற்றிய கதையை அவர்களுக்கு விவரமாகக் கூறலானார். "இங்கு ஒரு காலத்தில் மலதயம், கரூஷம் என்ற இருநாடுகள் இருந்தன. அந்த நாடுகள் செழிப்புற்று செம்மையாக இருந்தன. இந்தப் பகுதிக்கு தாடகை என்னும் அரக்கியும் அவளது மைந்தன் மாரீசன் என்பவனும் வந்து சேர்ந்தனர். அன்றே இந்த நாடுகளுக்குச் சனி பிடித்து விட்டது. அதுமுதல் இந்தப் பகுதியே பாழாகி விட்டது. மனிதர்கள் இங்கு தலை காட்ட பயப்பட்டு வராமல் போய் விட்டனர். தாடகை அல்ப சொல்பமானவளல்ல. ஆயிரம் யானைகளின் பலத்தை ஒருங்கே கொண்டவள். எனவே தனது பலத்தால் எல்லாம் அழித்து இரு நாடுகளையும் காடாக ஆக்கி விட்டாள்." அதுகேட்டு இராமன் "அந்தத் தாடகைக்கு எப்படி அவ்வளவு பலம் வந்தது?" எனக் கேட்க அவரும் "இராமா, அவள் கதையும் ஆச்சரிய கரமானதே. அதையும் கூறுகிறேன் கேள்" எனக் கூறி அவ்வரலாற்றை சொன்னார். "சுகேது என்றொரு யட்சன் இருந்தான். அவனுக்குக் குழந்தையே இல்லாமல் போக பிரம்மதேவனைக் குறித்து அவன் கடுந்தவம் புரியலானான். பிரம்மதேவரும் அவன் முன் தோன்றி அவனுக்கு ஆயிரம் யானைகள் பலம் கொண்ட ஒரு பெண்  குழந்தை                       பிறக்குமென   வரம்   அருளி மறைந்தார். 

அவரது வரத்தின் படியே சுகேது விற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. தாடகை என்ற பெயரில் அவள் வளர்ந்து பெரிய வளானாள். தக்க வயது வந்தபோது அவள் மிகவும் அழகுள்ளவளாகவே இருந்தாள். சுகேதுவும் அவனை சுந்தன் என்ற யட்சனுக்கு விவாகம் செய்து வைத்தான். அத்தம் பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவனே மாரீசன். அவன் இந்திரனுக்குச் சமமானவன். மகா கர்வம் கொண்டவன். அப்போது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதே பகுதியில் வசித்த அகத்திய மாமுனிவர் தன் தவத்தை கலைத்தானென்பதற்காக சுந்தனை இறந்துபோகும் படி செய்து விட்டார். அதனால் ஆத்திரம் கொண்ட தாடகையும் மாரீசனும் அவரையே விழுங்கிவிடுவது போல வாயை ஆவெனப் பிளந்து கொண்டு வந்தனர். அப்போது தான் தாடகை அரக்கியானாள். மாரீசனும் அரக்கனானான். தாடகையின் அழகு அடியோடு மறைந்து போய் விகார உருவம் வந்துவிட்டது. அன்று முதல் இந்தப் பகுதியையே அவள் நாசப்படுத்தி வருகிறாள். அவளைப் பெண்ணென்றும் பாராமல் நீ கொன்றுவிட வேண்டும். அதனால் உனக்கு எவ்விதப் பாவமும் வராது."  இராமனும் கைகூப்பிக் கொண்டு "முனிசிரேஷ்டரே என் தந்தை நீங்கள் சொல்கிறபடியெல்லாம் நான் செய்ய வேண்டுமென்று கூறி அனுப்பி இருக்கிரார். உங்கள் உத்திரவின் படியே தாடகையைக் கொல்கிறேன்" என்று வில்லின் நாணை இழுத்து 'டங்'கென சத்தம் செய்தான். அந்த சத்தம் அக்காட்டிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் நடுநடுங்க வைத்தது. ஆனால் தாடகையோ ஆத்திரம் கொண்டு வந்தாள். தன்னை நோக்கி ஓடி வரும் தாடகையை இராமன் இலட்சுமணனுக்குக் காட்டி "பார் இவளது கோர சொரூபத்தைக் கண்டாலே கதி கலங்கும். ஆனாலும் இவள் பெண். இவளைக் கொல்ல
மனமே வரவில்லை. அவளது மூக்கு, காது முதலிய அவயவங்களை மட்டும் அறுக்கிறேன்" என்றான்.

மனமே வரவில்லை. அவளது மூக்கு, காது முதலிய அவயவங்களை மட்டும் அறுக்கிறேன்" என்றான்.
தாடகையின் காதில்இராமன் கூறிக் கொண்டிருந்தது விழுந்து விட்டது. அவள் தன் கைகளை ஆட்டி பெரிய பேய்க்காற்றைக் கிளப்பி தூசியால் இராமனையும் இலட்சுமணனையும் மறைக்க முயன்றாள். கல்மாரி பொழியச் செய்தாள். இராமனோ அதை லட்சியம் செய்யாது அவளது இரு கைகளையும் அறுத்துத் தள்ளினான். இலட்சுமணன் அவளது மூக்கையும் காதுகளையும் அறுத்தான். ஆனால் அரக்கி மேலும் கற்களை அவர்கள் மீது பொழியலானாள். அப்போது விசுவாமித்திரர் "இராமா, இந்த அரக்கிக்காக இரக்கம் காட்டாதே. இவளை உயிரோடு விட்டால் இனியும் பல அனர்த்தங்களே ஏற்படும். இவளைக் கொன்று விடு" என்றார். இராமனும் உடனே ஒரு அம்பை அவளது மார்பில் தைக்குமாறு எய்தான். மறுகணமே ஆவென அலறி அவள் கீழே விழுந்து உயிர்துறந்தாள்.விசுவாமித்திரரும் "இராமா, நல்ல காரியம் செய்தாய். இன்று இரவு நாம் இங்கேயே தங்கி விட்டுக் காலையில் எழுந்து எனது ஆசிரமத்திற்குச் செல்வோம்" என்றார். அதன்படியே இரவைக் கழித்து மறுநாள் அதிகாலையில் எழுப்பி ஸ்நானாதிகளை செய்யச் சொல்லி இராமனையும் இலட்சுமணனையும் கிழக்கு நோக்கி உட்கார வைத்து பல அஸ்திரங்களை

பிரயோகிக்கும் விதங்களையும் அவற்றிற்கான மந்திரங்களையும் உபதேசித்தார். இராமனும் ஜெபம் செய்யவே அவ்வளவு அஸ்திரங்களும் ஒன்று திரண்டு வந்து "நாங்கள் எப்போதும் சேவை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றன. இராமன் அவற்றை ஒவ்வொன்றாகத் தொட்டு "இப்போதைக்கு நீங்கள் என் மனத்திலேயே இருங்கள்" என்றான். அதன்பின்னர் அவர்கள் மூவரும் ஒரு மலைச்சாரல் வழியே செல்கையில் அங்கே ஒரு அழகிய வனத்தைக் கண்டனர். விசுவாமித்திரர் அந்த வனத்தைச் சுட்டிக் காட்டி "இதைப் பற்றிய கதையும் கூறுகிறேன்" எனக் கூறி கதையை ஆரம்பித்தார். "வெகு காலத்திற்கு முன் விரோகனன் என்பவன் இருந்தான். அவனது மகன் பலி. அவன் மிகுந்த பராக்கிரமசாலியாகி மூன்று உலகையும் வென்று சொர்க்க லோகத்தையும் தன் உடமையாக்கிக் கொண்டான். அப்போது திருமால் கஸ்யபரின் மகன் வாமனனாக அவதாரம் எடுத்து மகாபலி செய்து கொண்டிருந்த யாகத்திற்குப் போய்ச் சேர்ந்தார். பலிச்சக்கரவர்த்தியிடம் அவர் தம் காலால் மூன்றடி இடம் வேண்டுமெனக் கேட்டார். பலியும் அதைக் கொடுப்பதாக வாக்களித்தான். அவர் ஒரு அடியில் பூமியையும் மற்றதால் ஆகாயத்தையும் அளந்து விட்டு மூன்றாவது அடியாக பலியின் தலைமீது கால்வைத்து அழுத்தி அவனைப் பாதாளலோகத்திற்கு அனுப்பினார்.

வாமனரும் கஸ்யபரும் இதே ஆசிரமத்தில்தான் தவம் செய்தனர். எனவே நானும் இதனருகே ஆசிரமம் அமைத்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் ராட்சசர்களின் தொல்லை ஒன்று தான் இங்கு மிக அதிகமாக உள்ளது." விசுவாமித்திரர் இருக்கும் ஆசிரமத்தின் பெயர் சித்தாசிரமம். விசுவாமித்திரரையும் இராமனையும் அங்குள்ளோர் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.முறைப் படி உபசாரங்களும் நடந்தன. சற்று நேரம் சிரமபரிகாரம் செய்து கொண்டபின் இராமனும் இலட்சுமணனும் விசுவாமித்திரரிடம் வந்து "முனிவரே, இனி நீங்கள் யாகத்தை ஆரம்பிக்கலாம். அதை நாங்கள் காக்கிறோம்" என்றான். அன்றைய இரவு கழிய மறுநாள் ஸ்நானாதிகளை முடித்துக் கொண்டு விசுவாமித்திரர் யாகம் செய்யலானார்.இராமனும் இலட்சுமணனும் அங்கு வந்தனர். விசுவாமித்திரர் யாகத்தை ஆரம்பித்து விட்டதால் பேசவில்லை. மற்றவர்கள் அந்த யாகம் ஆறு நாள்கள் வரை நடக்கும் எனக்கூறினர்.இராமனும்  இலட்சுமணனும்   இரவு பகலெனப் பாராமல் அந்த யாகத்தை கண்களை இமைகள் காப்பது போலக் காக்கலாயினர். இப்படியாக ஐந்து நாள்கள் கழிந்தன. ஆறாவது நாளும் வந்தது. யாகம் நன்கு முறைப்படி நடக்கையில் வான வெளியில் மாரீசன், சுபாகு ஆகிய இருவரும் தமது சகபாடிகளுடன் யாகத்தைக் கெடுக்க வந்தனர். இராமன் ஒரு அம்பால் மாரீசனை அடித்து சமுத்திரத்தில் போய் விழச் செய்தான். அக்கினி அஸ்திரத்தை உபயோகித்து சுபாகுவையும் வாயு அஸ்திரத்தைக் கொண்டு மற்ற அரக்கர்களையும் கொன்றான். விசுவாமித்திரரின் யாகமும் எவ்வித இடையூறுமின்றி முடிவடைந்தது. அவர் இராமனையும் இலட்சுமணனையும் மெச்சிப் புகழ்ந்து கொண்டார். 

(தொடரும்)

No comments:

Post a Comment